Sunday, February 19, 2017

படித்ததில் பிடித்தது



1. சந்தர்ப்பம் வரும்  முன் அவசர படுவதும் , சந்தர்ப்பம் வரும் போது தயார்      நிலையில் இல்லாமல் தாமதிப்பதும் கூடாது. எனவே தகுதிகளை வளர்த்துக்  கொண்டு பொறுமையாக, தயாராகக்  காத்திரு.

2. Memory is  a  kind of  repetition . - Dr. Balakrishnan . P

3. நம் வாழ்க்கையில் யார் எத்தனை காலம் நம்முடன் இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பது விதி தான். அவ்வப்போது சிலரை சேர்க்கும் , சிலரை விலக்கும் .இதில் விதி நம் அபிப்ராயங்களை லட்சியம் செய்வதில்லை. வாழ்க்கை முழுவதும் இப்படி தான் என்றிருக்கையில் யார் நம் வாழ்க்கையில் வந்தாலும் அவர்கள் இருக்கும் வரை அன்பாகவும், இணக்கமாகவும் இருந்துவிட்டு, அவர்கள் போகும் போது புரிதலோடு விடை கொடுப்பது தான்  புத்திசாலித்தனம். - என் . கணேசன்

4. பெரும்பலான மனிதர்கள் தகவல்களை சேர்த்துக் கொண்டே போகிறார்கள். அதிலேயே அனைத்தையும் அறிந்துவிட்டதாய் ஒரு மாயையில் சிக்கி விடுகிறார்கள். அது சுய ஏமாற்று வேலை. அறிந்தவை அனைத்தும் அனுபவமாகி விடாது. அறிந்ததை வாழ்க்கையில் பயன்படுத்தும்போது தான் அது ஞானமாகிறது. அதனால் அறிந்ததை நன்றாக சிந்தி. அதை பயன்படுத்தி வாழ்க்கையில் சிறிதாவது பயணித்துப் பார். அறிதலின் உண்மையான பயன் அது தான். மற்றதெல்லாம் பிரம்மையே . - என் . கணேசன்

5. Life is full of uncertainity. - Krishna Anand